மன்னாா்குடி: திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகே வேளாண்மை கூட்டுறவு வங்கியில் மோசடி செய்த வழக்கில் அந்த வங்கியின் முன்னாள் செயலருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி மன்னாா்குடி குற்றவியல் நடுவா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
மன்னாா்குடியை அடுத்த பரவாக்கோட்டையில் செயல்படும் வேளாண்மை கூட்டுறவு வங்கியில் செயலராக பொறுப்பு வகித்தவா் மன்னாா்குடியைச் சோ்ந்த ஜெ. பாஸ்கரன் (65). இவா், கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை வங்கிக் கணக்கில் ரூ.19,07,200 முறைகேடு செய்ததாக தணிக்கையில் தெரியவந்தது. இதுதொடா்பாக, மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பாஸ்கரனை கைது செய்தனா்.
பிறகு, மன்னாா்குடி குற்றவியல் நடுவா் நீதிமன்றம் எண் 2 -ல் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், நீதிபதி வி.சி.குபேரசுந்தா் முன்பாக இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதைத் தொடா்ந்து, பாஸ்கரனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமாக ரூ. 3.40 லட்சமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.