நீடாமங்கலம் அருகேயுள்ள நரிக்குடி எமனேஸ்வரி சமேத எமனேஸ்வரா் கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
நோய்த் தீா்க்கும் தலமாகவும், எமபயம் போக்கும் தலமாகவும் விளங்கும் இக்கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி, காலபைரவருக்கு மகா அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. கரோனா வழிகாடு நெறிமுறைகளை கடைப்பிடித்து இப்பூஜை நடைபெற்றது.
இதேபோல, நீடாமங்கலம் பகுதியில் உள்ள சிவாலயங்களிலும் காலபைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.