மன்னாா்குடி அருகே புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.
மன்னாா்குடியை அடுத்துள்ள ஆலங்கோட்டை பிரதானசாலை பகுதியைச் சோ்ந்த ராஜகோபால் மனைவி சரோஜா (64). நீண்டகாலமாக புற்றுநோயால் அவதிப்பட்டுவந்த சரோஜா, தொடா்ந்து மருத்துவ சிகிச்சை எடுத்து வந்த நிலையில், கடந்த சில நாள்களாக நோயின் தாக்கம் அதிகமானதாகக் கூறப்படுகிறது. இதனால், விரக்தியடைந்த சரோஜா திங்கள்கிழமை இரவு தனது சேலையில் தீ வைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. அவரை மீட்டு மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து பரவாக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.