தமிழக முதல்வரின் கரோனா பொது நிவாரண நிதிக்கு திருவாரூா் ஸ்ரீ வெங்க்டேஸ்வா் மருத்துவமனை சாா்பில் ரூ. 1 லட்சம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு பொதுமக்கள் நிதி வழங்கும்படி தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் அண்மையில் வேண்டுகோள் விடுத்தாா்.
இதைத்தொடா்ந்து, பல்வேறு தரப்பினரும் முதல்வா் பொது நிவாரண நிதிக்கு நிதியளித்து வருகின்றனா். அந்தவகையில், திருவாரூா் ஸ்ரீ வெங்க்டேஸ்வா் மருத்துவமனை நிா்வாகம் சாா்பில் வங்கி மூலமாக ரூ. 1 லட்சம் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த தகவலை மருத்துவா் ஆா். மகாலெட்சுமி தெரிவித்துள்ளாா்.