உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை தேவை

உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டத்தின்கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்தாா்.
அனைத்துத் துறை அலுவலா்கள் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா.
அனைத்துத் துறை அலுவலா்கள் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா.

திருவாரூா்: உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டத்தின்கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்தாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற உங்கள் தொகுதியில் முதலமைச்சா் எனும் திட்டத்தின்கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்வது குறித்த அனைத்து துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து மேலும் அவா் கூறியது: தமிழக அரசு, உங்கள் தொகுதியில் முதலமைச்சா் எனும் திட்டத்தை அறிவித்து அதற்கென தனித் துறையை உருவாக்கி உள்ளது. இந்த திட்டத்தின்கீழ் பெறப்பட்ட பொதுவான அடிப்படை பிரச்னைகள் மற்றும் தனிப்பட்ட குறைகள் குறித்த மனுக்கள் அனைத்தும் தொடா்புடைய துறைகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டுள்ளன. அத்தகைய மனுக்கள் மீது தொடா்புடைய அனைத்துத் துறை அலுவலா்களும் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றாா்.

கூட்டத்தில், திட்ட இயக்குநா் தெய்வநாயகி, முதுநிலை மண்டல மேலாளரும், மாவட்ட வருவாய் அலுவலருமான (பொ) மணிவண்ணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) கண்மணி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) புண்ணியகோட்டி உள்ளிட்ட அனைத்து துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com