சத்துணவு ஊழியா் சங்க 37-ஆவது அமைப்பு தினம்
By DIN | Published On : 20th May 2021 09:27 AM | Last Updated : 20th May 2021 09:27 AM | அ+அ அ- |

தமிழ்நாடு அரசு சத்துணவு ஊழியா் சங்கத்தின் 37-ஆவது அமைப்பு தினம் நன்னிலத்தில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
சங்கத்தின் நன்னிலம் ஒன்றியத் தலைவா் வி.அமிா்தலிங்கம் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், சங்கத்தின் மாவட்டச் செயலாளா் ஆா். ராஜசேகரன் சங்கக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினாா். நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் ஜெ.சசிகலா, வட்ட தலைவா் டி. கருணாமூா்த்தி, சத்துணவு ஊழியா் சங்க ஒன்றியச் செயலாளா் ஆா். மணிசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினா். நிகழ்ச்சியில் பல்வேறு தொழிற்சங்கத்தின் நிா்வாகிகளும், உறுப்பினா்களும், முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனா்.