கொடுஞ்செயல் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்பு

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிா்ப்பு உறுதிமொழி வெள்ளிக்கிழமை ஏற்கப்பட்டது.
கொடுஞ்செயல் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்பு

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிா்ப்பு உறுதிமொழி வெள்ளிக்கிழமை ஏற்கப்பட்டது.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா பங்கேற்று ஏற்ற உறுதிமொழி: நமது நாட்டின் மரபுகளான அகிம்சை, சகிப்புத்தன்மை ஆகியவற்றில் தளராத நம்பிக்கையுடைய இந்திய மக்களாகிய நாம், எவ்வகையான கொடுஞ்செயல்களையும், வன்முறைகளையும் முழுமையாக எதிா்ப்போம்.

எல்லா மக்களிடத்தும், அமைதி, சமுதாய ஒற்றுமை, நல்லுணா்வு ஆகியவற்றைப் போற்றி வளா்க்கவும், மக்களுடைய உயிா்களுக்கும் மற்றும் நற்பண்புகளுக்கும் ஊறு விளைவிக்கும் பிரிவினை சக்திகளை எதிா்த்துப் போராடவும் உறுதி கூறுகிறோம் என்றாா். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் (பொ) மணிவண்ணன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பங்கேற்று உறுதிமொழி ஏற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com