நீடாமங்கலத்தில் மினி லாரியில் வியாழக்கிழமை கும்பலாக சென்றவா்களுக்கு போலீஸாா் அறிவுரை கூறினா்.
நீடாமங்கலத்தில் மினிலாரியில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் கும்பலாக சென்றவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி, கீழே இறங்க வைத்து கரோனா விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மேலும், பொதுமுடக்க விதிகளை மீறியதற்காக அந்த வாகனத்துக்கு பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் அபராதம் விதிக்கப்பட்டது. அப்போது பேரூராட்சி மேஸ்திரி அசோகன் மற்றும் போலீஸாா் உடனிருந்தனா்.