நீடாமங்கலத்தில் அனுமதியின்றி மணல் ஏற்றிவந்த மினிலாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
நீடாமங்கலம் காவல் ஆய்வாளா் முருகேசன் மற்றும் போலீஸாா், திங்கள்கிழமை இரவு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, தஞ்சாவூா் சாலையில் கொண்டியாறுபாலம் அருகே மணல் பாரத்துடன் வந்த மினி லாரியை தடுத்து நிறுத்தினா். அதன் ஓட்டுநா் தப்பியோடிவிட்டாா். விசாரணையில் அனுமதியின்றி மணல் ஏற்றிவந்தது தெரியவந்தது.
இதையடுத்து, மினி லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய ஓட்டுநரை தேடிவருகின்றனா்.