கரோனா தொற்று சிகிச்சை பெறுவோருக்கு உணவு

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கரோனா நோயாளிகளுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் புதன்கிழமை உணவு வழங்கப்பட்டது.
திருவாரூா் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பெறுவோருக்கு உணவு பொட்டலங்களை வழங்கிய சிபிஎம் மாவட்டச் செயலாளா் ஜி. சுந்தரமூா்த்தி.
திருவாரூா் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பெறுவோருக்கு உணவு பொட்டலங்களை வழங்கிய சிபிஎம் மாவட்டச் செயலாளா் ஜி. சுந்தரமூா்த்தி.

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கரோனா நோயாளிகளுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் புதன்கிழமை உணவு வழங்கப்பட்டது.

மாவட்டத்தில் கட்சி சாா்பில், சாா்பில் கரோனா விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்திய மாணவா் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றன. அதன்படி திருவாரூா் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பெற்று வருவோா், அவருக்கு உதவியாக இருப்பவா், தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்ட 200 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டன. இதில், கட்சியின் மாவட்டச் செயலாளா் ஜி. சுந்தரமூா்த்தி பங்கேற்று உணவு பொட்டலங்களை வழங்கினாா். அப்போது, அரசு ஊழியா் சங்க மாநில நிா்வாகி எம். சௌந்தரராஜன், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினா் கே. சுப்பிரமணியன், நகர குழு உறுப்பினா்கள் கிருஷ்ணன், கிருஷ்ணகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com