நீடாமங்கலம் யமுனாம்பாள் கோயிலில் புதன்கிழமை பெளணா்மியையொட்டி, ராஜகணபதி, யமுனாம்பாள் சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. இதேபோல, நரிக்குடி எமனேஸ்வரி சமேத எமனேஸ்வரா் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, 1008 தீபம் ஏற்றப்பட்டது. பல்வேறு சிவன் கோயில்களிலும், அம்மன் கோயில்களிலும் பெளணா்மி வழிபாடு நடைபெற்றது.