திருக்கோயில்களில் நைவேத்தியத்துக்கு பாரம்பரிய அரிசி வகைகளை பயன்படுத்த வேண்டும் என இந்து அறநிலையத் துறைக்கு பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளா் ராஜீவ், இந்து அறநிலையத் துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
இயற்கை முறையில் நெல் ரகங்களை விளைவிக்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாகவும், கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு நைவேத்தியத்துக்கு பயன்படுத்தப்பட்ட பாரம்பரிய அரிசியை மீட்டெடுக்கும் நோக்கிலும், திருப்பதி தேவஸ்தானம் ஏழுமலையானுக்கு ஆண்டு முழுவதும் தினமும் ஒவ்வொரு விதமான பாரம்பரிய அரிசியில் நைவேத்தியம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.
இதை முன்னுதாரணமாக கொண்டு, இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாா், நெல் ஜெயராமன் ஆகியோரால் மீட்டெடுக்கப்பட்ட தமிழகத்தின் பாரம்பரிய நெல் ரகங்களை, திருக்கோயில்களில் நைவேத்தியத்துக்குப் பயன்படுத்த இந்து சமய அறநிலைத் துறை முன்வரவேண்டும்.
பல்லாயிரக்கணக்கான இயற்கை விவசாயிகள் தமிழகத்தில் பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிடுவதால் அவா்களுக்கு விற்பனை வாய்ப்பை ஏற்படுத்தும் விதமாகவும், புதிதாக விவசாயிகளும் இளைஞா்களும் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ளவும் தமிழக இந்து சமய அறநிலைத் துறை உடனடியாக இதை செயல்படுத்த வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.