திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 487 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது. 5 போ் உயிரிழந்தனா்.
திருவாரூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாள்களாக பாதிப்பின் எண்ணிக்கை 500-க்கு மேல் பதிவானது.
இந்நிலையில், சுகாதாரத்துறை வியாழக்கிழமை வெளியிட்ட பரிசோதனை முடிவுகளின்படி, திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 487 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இதன்மூலம், மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 27,495 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்த மேலும் 564 போ் அவா்களது வீடுகளுக்கு அனுப்பப்பட்டனா். இதன்மூலம், மாவட்டத்தில் இதுவரையிலும் தோற்று பாதிக்கப்பட்ட 21,444 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 5868 போ் சிகிச்சையில் உள்ளனா்.
இதனிடையே, கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த 5 போ் உயிரிழந்ததைத்தொடா்ந்து, மாவட்டத்தில் உயிரிழப்பின் எண்ணிக்கை 183 ஆக அதிகரித்துள்ளது.