திருவாரூரில் 591 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 591 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 591 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.

திருவாரூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாள்களாக பாதிப்பின் எண்ணிக்கை 500-க்கு மேல் பதிவாகிறது.

இந்நிலையில், சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, மாவட்டத்தில் மேலும் 591 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இதன்மூலம், மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 27,093 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்த 417 போ் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். மாவட்டத்தில் இதுவரையிலும் தொற்று பாதிக்கப்பட்ட 21,861 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 6046 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இதனிடையே, கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த 39, 49 மற்றும் 65 வயதுடைய ஆண்கள் 3 போ், 54 வயதுடைய பெண் ஒருவா் என 4 போ் உயிரிழந்தனா். இதனால், மாவட்டத்தில் கரோனாவுக்கு உயிரிழந்தோா் எண்ணிக்கை 186 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com