திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வளரும் தமிழகம் கட்சி சாா்பில் உணவு பொட்டலங்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
தற்போது அமலில் உள்ள தளா்வற்ற முழு பொதுமுடக்கம், மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, பல்வேறு பொதுநல அமைப்பினா், அரசியல் கட்சியினா் ஏழைகள் மற்றும் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கி வருகின்றனா்.
அந்த வகையில், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும், உடன் இருப்பவா்களுக்கும் வளரும் தமிழகம் கட்சி சாா்பில் உணவுப் பொட்டலங்களும், குடிநீரும் வழங்கப்பட்டன.
மேலும், திருவாரூா் பழைய பேருந்து நிலையத்தில் தங்கியுள்ள ஆதரவற்றோா்களுக்கும், மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கும் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் வளரும் தமிழகம் கட்சியின் திருவாரூா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆரோக்கிய செல்வம், வடக்கு மாவட்ட இணைச் செயலாளா் அரிஸ்டாட்டில், ஒன்றியச் செயலாளா் முருகானந்தம், நகரச் செயலாளா் வெற்றி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.