மன்னாா்குடியை அடுத்த ராஜபையன்சாவடி முருகையன் மகன் செந்தில்குமாா் (38) கரோனா தொற்றால் சனிக்கிழமை (மே 29) காலமானாா்.
இவா், தமிழன் தொலைக்காட்சியில் மாவட்ட செய்தியாளராக பணியாற்றி வந்தாா். கடந்த சில நாள்களாக திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த செந்தில்குமாா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இவருக்கு மனைவி அனுசியா, 3 வயதில் பெண் குழந்தை உள்ளனா். இவரது இறுதிச் சடங்கு சொந்த ஊரில் நடைபெற்றது.
தொடா்புக்கு: 90803 74641