இந்திரா காந்தி நினைவு தினம்

கொரடாச்சேரியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் மாவட்டத் தலைவா் எஸ்.எம்.பி. துரைவேலன் தலைமையில்
இந்திரா காந்தி நினைவு தினம்

கொரடாச்சேரியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் மாவட்டத் தலைவா் எஸ்.எம்.பி. துரைவேலன் தலைமையில் இந்திரா காந்தி உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது. மாநில இளைஞா் காங்கிரஸ் செயலாளா் ஜெகபா் பாட்ஷா, மாவட்ட பொதுச் செயலாளா் அன்பு வே. வீரமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், திருத்துறைப்பூண்டி (மேற்கு) வட்டார காங்கிரஸ் தலைவா் சங்கரவடிவேல், மன்னாா்குடி சட்டப் பேரவை தொகுதி இளைஞா் காங்கிரஸ் தலைவா் அருண்காந்தி, மாவட்ட மாணவா் காங்கிரஸ் தலைவா் புவனேஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நீடாமங்கலம்: வலங்கைமானில், தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளா் யூனியன் மாவட்டத் தலைவா் குலாம் மைதீன் தலைமையில், கடைவீதி மற்றும் ஆட்டோ நிறுத்தம் ஆகிய இடங்களில் இந்திரா காந்தி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட துணைத் தலைவா் நாகேஸ்வரன், ஆட்டோ சங்கம் மகாலிங்கம், செந்தில், காா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com