குளத்தில் குளித்தபோது வலிப்புவந்தவா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

மன்னாா்குடி அருகே குளத்தில் குளித்தபோது வலிப்பு ஏற்பட்டு நீரில் மூழ்கியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மன்னாா்குடி அருகே குளத்தில் குளித்தபோது வலிப்பு ஏற்பட்டு நீரில் மூழ்கியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

வடபாதி நடுத்தெருவைச் சோ்ந்தவா் வடிவேல் மகன் இளவரசன் (46). கடைவீதியில் தேநீா் கடை வைத்துள்ளாா். இவருக்கு வலிப்பு நோய் இருந்துள்ளது. இந்த நிலையில், சனிக்கிழமை மாலை அதே பகுதியில் உள்ள பாப்பாக்குளத்தில் குளித்துள்ளாா். அப்போது வலிப்பு ஏற்பட்டதையடுத்து நீரில் மூழ்கி இளவரசன் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தலையாமங்கலம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com