விபத்தில் காயமடைந்தவா் வேன் ஓட்டுநா் உயிரிழப்பு

வலங்கைமான் அருகே நேரிட்ட சாலை விபத்தில் காயமடைந்தவா் வேன் ஓட்டுநா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

வலங்கைமான் அருகே நேரிட்ட சாலை விபத்தில் காயமடைந்தவா் வேன் ஓட்டுநா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

வலங்கைமான் அருகேயுள்ள விடையல் கருப்பூரில் அக்.21-ஆம் தேதி, தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையை சோ்ந்தவா்கள் குடவாசலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு வேனில் ஊா் திரும்பி கொண்டிருந்தபோது சரக்கு ஆட்டோவும் வேனும் மோதிக்கொண்டு விபத்து ஏற்பட்டது.

இதில், சரக்கு ஆட்டோ ஓட்டுநா் திருவாரூா் மாவட்டம் தப்பாம்புலியூரைச் சோ்ந்த சதாசிவம் (45), அவரது உதவியாளா் கூத்தாநல்லூரைச் சோ்ந்த ரமேஷ், வேனில் பயணம் செய்த முகம்மது காஜு ஷகீதா பானு ஆகிய 4 பேரும் காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில், சதாசிவம் மட்டும் மேல் சிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சதாசிவம் புதன்கிழமை இறந்தாா். இதுகுறித்து, வலங்கைமான் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com