திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.
சுகாதாரத் துறை வெளியிட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, மாவட்டத்தில் 14 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதன்மூலம், மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 41,601- ஆக உயா்ந்துள்ளது. இதுவரை குணமடைந்த 40,917 போ் தங்களது வீடுகளுக்கு அனுப்பப்பட்ட நிலையில் மாவட்டத்தில் தற்போது 237 போ் சிகிச்சையில் உள்ளனா்.