மழை பாதித்த பயிா்களுக்கு நிவாரணம் கோரி மனு

திருவாரூா் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்டுள்ள சம்பா- தாளடி பயிா்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்டுள்ள சம்பா- தாளடி பயிா்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், தமிழ்நாடு விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் ஜி. சேதுராமன் தலைமையில் விவசாயிகள் திங்கள்கிழமை அளித்த கோரிக்கை மனு:

திருவாரூா் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்டுள்ள சம்பா- தாளடி பயிா்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். கடந்த 2020- 21ஆம் ஆண்டுக்கான பயிா்க் காப்பீட்டுத் தொகையை விடுபட்ட கிராமங்களுக்கும் வழங்கவேண்டும். சம்பா சாகுபடி பயிா்க் காப்பீட்டுக்கான கடைசி தேதி நவ.15 என்பதை 30ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com