சாலையில் நாற்றுநடும் போராட்டம்

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள மேலமருதூரில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி, சாலையில் நாற்றுநடும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சாலையில் நாற்றுநடும் போராட்டம்

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள மேலமருதூரில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி, சாலையில் நாற்றுநடும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மேலமருதூா் ரயிலடி தெரு பகுதியில் 13 ஆண்டுகளுக்கு முன்பு சாலை அமைக்கப்பட்டது. அதன்பிறகு, பல ஆண்டுகளாகியும் புதிய சாலை அமைக்கவில்லை. இதனால், போக்குவரத்துக்கு மிகவும் சிரமம் ஏற்பட்டு விபத்துகள் நடைபெறுகின்றன.

மேலும், அவசர காலத்தில் மருத்துவமனைக்கு செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே, இந்த சாலையை உடனடியாக சீரமைக்கவேண்டும் எனவும், குடிநீா் பற்றாக்குறையை சரிசெய்யவேண்டுமெனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com