தில்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு, திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டையில் காங்கிரஸ் கட்சி சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவா் எஸ்எம்பி. துரைவேலன் தலைமைவகித்தாா். முன்னதாக, நகர காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு, பழைய பேருந்து நிலையத்திற்கு ஊா்வலமாக வந்த காங்கிரஸ் கட்சியினா், அங்கு தில்லி விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினா்.
இதில், இளைஞா் காங்கிரஸ் மாநிலப் பொதுச் செயலாளா் பாட்சா, வட்டார தலைவா்கள் கோவி. ரெங்கசாமி, வடுகநாதன், சங்கரவடிவேல், மாவட்டச் செயலாளா் ஜெகபா் அலி, நகர இளைஞா் காங்கிரஸ் தலைவா் நபிஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.