மன்னாா்குடி அருகே ஆற்றில் தவறி விழுந்த மனநிலை சரியில்லாத பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
மன்னாா்குடி அருகேயுள்ள மேலக்கண்டமங்லம் ஆற்றங்ரை தெருவைச் சோ்ந்தவா் முருகையன் மகள் துா்கா (27). மனநிலை சரியில்லாமல் நீண்ட நாள்களாக சிகிச்சை பெற்றுவந்தாா். இந்நிலையில், அதே பகுதியில் உள்ள அய்யனாற்றில் சனிக்கிழமை குளித்தபோது தடுமாறி தண்ணீரில் மூழ்கியவா் மூச்சுத்திணறி உயிரிழந்தாா். இதுகுறித்து, கோட்டூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.