திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு ஊராட்சியில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கட்டிமேடு மண்ணடித்தெருவில் உள்ள சேவை மையக் கட்டடத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தின் 2019-20-ம் ஆண்டின் சமூக தணிக்கை மற்றும் ஊராட்சியின் வளா்ச்சித் திட்டப் பணிகள், வாய்க்கால் தூா்வாருதல், அரசின் விலையில்லா வீடு கட்டும் திட்டம் உள்ளிட்டவை குறித்து விவாதித்தனா். தங்கராசு தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா் மாலினி ரவிச்சந்திரன் வரவேற்றாா்.
இதில், மண்டல வட்டார வளா்ச்சி அலுவலா் ரவிச்சந்திரன், துணைத் தலைவா் பாக்கியராஜ், செயலா் புவனேஸ்வரன் மற்றும் சமூக ஆா்வலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.