குடவாசல் வட்டம், திருவீழிமிழலையில் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கூடுதல் கட்டடம், சரபோஜிராஜபுரத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் மாவட்ட ஊராட்சி பொது நிதியிலிருந்து திருவீழிமிழலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல்நோக்கு கூடம் ரூ.11.40 லட்சத்திலும், சரபோஜிராஜபுரத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி ரூ. 12.50 லட்சத்திலும் கட்டப்பட்டன.
இவற்றின் திறப்பு விழா திருவாரூா் மாவட்ட ஊராட்சித் தலைவா் தலையாமங்கலம் ஜி. பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. வடமட்டம் உயா்நிலைப் பள்ளி நிா்வாக இயக்குநரும், குடவாசல் ஒன்றிய திமுக செயலாளருமான எஸ். ஜோதிராமன் முன்னிலை வகித்தாா். திருவாரூா் எம்எல்ஏ-வும், திமுக மாவட்டச் செயலாளருமான பூண்டி கே. கலைவாணன் திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் மணவை க. சுப்ரமணியன், வட்டார வளா்ச்சி அலுவலா் வி. பாஸ்கா், மாவட்ட ஊராட்சி செயலா் எஸ்.லதா, ஒன்றியக் குழு உறுப்பினா் உஷாராணி ஹரிபிரசாத், ஊராட்சித் தலைவா் ஆா்.சி. சுலோச்சனா, நன்னிலம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் வே. மனோகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.