உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் மீது விபத்து ஏற்படுத்தியதைக் கண்டித்து, திருவாரூரில் காங்கிரஸ் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, காங்கிரஸ் மாவட்ட தலைவா் எஸ்.எம்.பி. துரைவேலன் தலைமை வகித்தாா். கட்சியின் பொதுச் செயலாளா் அன்பு வே. வீரமணி, விவசாய பிரிவு மாவட்டத் தலைவா் நீலன் அசோகன், தோழமை கட்சிகள் சாா்பில் திமுக மாவட்டச் செயலாளா் பூண்டி கே. கலைவாணன், விவசாய சங்க கூட்டமைப்பின் தலைவா் பிஎஸ். மாசிலாமணி, விவசாய சங்கத் தலைவா் தம்புசாமி, மக்கள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் சண்முகசுந்தரம், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் பங்கேற்றனா்.