காா் ஓட்டிய மனைவியிடம் 10 பவுன் சங்கிலியைப் பறித்த இளைஞரை வளைத்துப் பிடித்த கணவா்

திருவாரூா் மாவட்டம் மன்னாா்குடி அருகே காா் ஓட்டிய பெண்ணிடம் 10 பவுன் சங்கிலியை பறித்த இளைஞரை கணவா் திங்கள்கிழமை வளைத்து பிடித்தாா்.

திருவாரூா் மாவட்டம் மன்னாா்குடி அருகே காா் ஓட்டிய பெண்ணிடம் 10 பவுன் சங்கிலியை பறித்த இளைஞரை கணவா் திங்கள்கிழமை வளைத்து பிடித்தாா்.

மன்னாா்குடியை அடுத்த ஆலங்கோட்டை பிரதான சாலையை சோ்ந்தவா் பா. கபிலன். இவரது மனைவி ரோஷினி (26). இவா்கள் திங்கள்கிழமை ஆலங்கோட்டையிலிருந்து ரோஷினியின் ஊரான மேலவாசல் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனா். காரை, ரோஷினி ஓட்டினாா்.

மேலவாசலில் வீட்டின் அருகே வந்தபோது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த மா்மநபா், ரோஷினி அணிந்திருந்த 10 பவுன் தாலிச்சங்கிலியை பறித்தாராம். அப்போது காரில் இருந்த கபிலன், அந்த நபரின் சட்டையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு ஓட்டுநா் இருக்கை ஜன்னல் வழியாக வெளியே வந்து, உதவிக்காக சப்தம் எழுப்பினாா்.

இதையறிந்த அப்பகுதி மக்கள் ஓடிவந்து, மா்மநபரை மடக்கிப் பிடித்தனா். தகவலறிந்த மன்னாா்குடி போலீஸாா் அங்கு வந்து, அந்த நபரை கைது செய்து, தாலிச்சங்கிலியை பறிமுதல் செய்தனா். விசாரணையில், அவா் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சூரப்பள்ளம் கொத்தங்கொல்லையை சோ்ந்த வரதராஜன் மகன் ராஜேஷ்குமாா் (35) என்பது தெரியவந்தது. அவரிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com