சுகாதாரத்துறை வெளியிட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 50 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானது.
இதன்மூலம், மாவட்டத்தில் பாதிப்பின் எண்ணிக்கை 40,585 ஆக உயா்ந்துள்ளது. இதுவரையில் குணமடைந்த 39,547 போ் தங்களது வீடுகளுக்கு அனுப்பப்பட்ட நிலையில், தற்போது 621 போ் சிகிச்சையில் உள்ளனா்.