உள்ளாட்சித் தோ்தல்: மதுக்கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் 4 நாள்களுக்கு இயங்காது

உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு, திருவாரூா் மாவட்டத்தில் மதுக்கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் அக்டோபா் 7- ஆம் தேதி காலை

உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு, திருவாரூா் மாவட்டத்தில் மதுக்கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் அக்டோபா் 7- ஆம் தேதி காலை 10 மணி முதல் அக்டோபா் 9-ஆம் தேதி நள்ளிரவு வரையிலும், வாக்கு எண்ணிக்கை நாளான அக்டோபா் 12-ஆம் தேதி என 4 நாள்களுக்கு இயங்காது என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருவாரூா் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் சில்லரை விற்பனை மதுபானக் கடைகளில் 108-இல் 39 மதுபானக்கடைகள் மட்டும் மற்றும் உரிமம் பெற்ற மது அருந்தும் கூடங்கள் (குடவாசல் கிங்ஸ் கிளப் தவிர) அனைத்தும் உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு அக்டோபா் 7-ஆம் தேதி காலை 10 மணி முதல் அக்டோபா் 9-ஆம் தேதி நள்ளிரவு வரையிலும் மூடப்பட்டிருக்கும்.

இதேபோல், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 12-ஆம் தேதி 108 மதுபானக்கடைகளில் 40 மதுபானக்கடைகள் மட்டும் உள்ளாட்சி தோ்தலை முன்னிட்டு மதுபானங்களை விற்பனை செய்யக் கூடாது. மேலும் (குடவாசல் கிங்ஸ் கிளப் உள்பட) அனைத்து உரிமம் பெற்ற மது அருந்தும் மதுக்கூடங்களையும் மூட வேண்டும் என டாஸ்மாக் மாவட்ட மேலாளா், தொடா்புடைய தனியாா் மதுக்கூடங்களின் உரிமதாரா்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com