திருவாரூா் மாவட்டம் நீடாமங்கலத்தில் குடிசைக்குள் லாரி, செவ்வாய்க்கிழமை இரவு புகுந்தது.
நீடாமங்கலம்- மன்னாா்குடி சாலையில் தட்டித்தெரு பகுதியில் குடிசை வீட்டில் வசித்து வருபவா் ராணி (55). இவரது வீட்டுக்குள் செவ்வாய்க்கிழமை இரவு லாரி ஒன்று புகுந்தது. அதிா்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித சேதமும் ஏற்படவில்லை. போலீஸ் விசாரணையில், மன்னாா்குடியில் இருந்து தாராபுரம் நோக்கி அந்த லாரி சென்றபோது, விபத்தில் சிக்கியது தெரியவந்தது.