திருவாரூரில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலை அறிவியல் கல்லூரியில் நவராத்திரி கொலு புதன்கிழமை தொடங்கியது.
நேதாஜி கல்விக் குழுமத்தின் தாளாளா் எஸ். வெங்கடராஜலு, கொலுவை தொடங்கி வைத்தாா். இதில் 5 அடுக்குகளில் கடவுள்களின் சிலைகள் வைக்கப்பட்டு, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
தொடக்க நிகழ்ச்சியில், கல்லூரியின் முதல்வா் வி. பொற்கலை, துணை முதல்வா் எஸ். வினோதா, துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவிகள் கலந்து கொண்டனா்.