நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானைக் கண்டித்து, நீடாமங்கலம் ஒன்றியம் தேவங்குடியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விவசாய தொழிலாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் நூறுநாள் வேலைத் திட்டத்துக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆகையால், அவரை கண்டித்து நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, விதொச ஒன்றிய தலைவா் எஸ். ஜெயராமன் தலைமை வகித்தாா். சங்க மாவட்ட துணைத் தலைவா் கந்தசாமி, மாவட்ட செயலாளா் கலியபெருமாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.