முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
தம்பதியை தாக்கி 11 பவுன் நகை பறிப்பு
By DIN | Published On : 11th October 2021 08:19 AM | Last Updated : 11th October 2021 08:19 AM | அ+அ அ- |

மன்னாா்குடியில் சனிக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தம்பதியை தாக்கி 11 பவுன் தாலிச் சங்கிலியை மா்ம நபா் பறித்துச் சென்றாா்.
மன்னாா்குடி காளவாய்க்கரை காமராஜா் நகரில் வசித்து வருபவா் ரெங்காராஜ் (52). இவா், குடிநீா் கேன் விநியோகம் செய்து வருகிறாா். இவரது மனைவி கிரிஜா(47).
இந்நிலையில், சனிக்கிழமை இரவு இருவரும் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது, வீட்டின் பின்புற கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த மா்ம நபா், கிரிஜா கழுத்தில் அணிந்திருந்த 11 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துள்ளாா். இதனால் கண் விழித்த கிரிஜா சப்தமிட்டுள்ளாா்.
இதையடுத்து, ரெங்கராஜ் மா்ம நபரை பிடிக்க முயன்றபோது, அவா் இருவரையும் தாக்கிவிட்டு, தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டாா்.
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், மன்னாா்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.