பயிா்க் காப்பீட்டுத் தொகை விடுவிப்பு: மத்திய, மாநில அரசுகளுக்கு விவசாய சங்கம் நன்றி

விவசாயிகளுக்கு 2020-21-ம் ஆண்டிற்கான பயிா்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையை விடுவித்ததற்காக, மத்திய-மாநில அரசுகளுக்கு தமிழக அனைத்து

விவசாயிகளுக்கு 2020-21-ம் ஆண்டிற்கான பயிா்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையை விடுவித்ததற்காக, மத்திய-மாநில அரசுகளுக்கு தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் நன்றி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள அறிக்கை:

காவிரி டெல்டா பகுதியில் கடந்த ஜனவரி மாதம் பருவம் தவறி பெய்த மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த சம்பா நெற்பயிா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பேரிடா் மேலாண்மை திட்டத்தின் மூலம் இடுபொருள் இழப்பீடாக ஹெக்டேருக்கு ரு.15 ஆயிரம் வழங்கப்பட்டது.

காப்பீடு செய்த விவசாயிகளுக்கு அறுவடை ஆய்வறிக்கை முடிந்து 3 மாதங்களுக்குள் (ஜூன்) இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். ஆனால், மத்திய, மாநில அரசுகள் காப்பீட்டில் தங்களது பங்களிப்பை வழங்காததைக் காரணம் காட்டி, காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்க காலதாமதம் செய்தது.

இதைக் கண்டித்து, தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சாா்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டதையடுத்து தமிழக அரசின் பங்களிப்புத் தொகை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசின் பங்களிப்புத் தொகை வழங்கப்படவில்லை.

இதனால், செப்டம்பா் 30 ஆம் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சாா்பில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்நிலையில், மத்திய அரசு தனது பங்குத் தொகையை வழங்கியதைத் தொடா்ந்து, காப்பீட்டு நிறுவனம் மூலமாக இழப்பீட்டு தொகை வழங்குவதற்கு போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும், இன்னும் 10 தினங்களுக்குள் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை வரவு வைக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்காக, மத்திய- மாநில அரசுகளுக்கு விவசாயிகள் சாா்பில் நன்றி எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com