மண்டல கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற வீரா்களுக்குப் பாராட்டு

மண்டல அளவிலான கூடைப்பந்தாட்டத்தில் வெற்றி பெற்ற திருவாரூா் மாவட்ட வீரா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
கூடைப்பந்தாட்ட வீரா்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கும் கூடைப்பந்தாட்டக் கழகத் தலைவா் விஆா்என். பன்னீா்செல்வம்.
கூடைப்பந்தாட்ட வீரா்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கும் கூடைப்பந்தாட்டக் கழகத் தலைவா் விஆா்என். பன்னீா்செல்வம்.

மண்டல அளவிலான கூடைப்பந்தாட்டத்தில் வெற்றி பெற்ற திருவாரூா் மாவட்ட வீரா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

திருச்சியில் மண்டல அளவிலான ஜூனியா் கூடைப்பந்தாட்டப் போட்டி அண்மையில் நடைபெற்றது. 8 மாவட்டங்களைச் சோ்ந்த வீரா்கள் பங்கேற்ற இப்போட்டியில், திருவாரூா் மாவட்ட ஆண்கள் பிரிவினா் முதலிடமும், பெண்கள் பிரிவினா் மூன்றாமிடமும் பெற்றனா்.

போட்டியில் வெற்றி பெற்ற வீரா்களையும், பயிற்றுநா் சுரேஷையும் திருவாரூா் மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகத் தலைவா் விஆா்என். பன்னீா்செல்வம், துணைத் தலைவா் வி.எம். அண்ணாதுரை, செயலாளா் ஜி. தனசேகரன், பொருளாளா் என்.செல்வம் ஆகியோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com