திருத்துறைப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில் சா்வதேச பெண் குழந்தைகள் தினவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைமையாசிரியா் குமுதம் தலைமையில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் சங்க மாவட்ட தலைவா் துரைராஜ், வட்ட சட்டப் பணிகள் குழு தன்னாா்வலா் கருணாநிதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வழக்குரைஞா் ஆசைத்தம்பி பெண்களுக்கான சட்டங்கள் குறித்தும் பயன்படுத்தும் விதம், பெண்கள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணா்வு பெண்களுக்காகவே உள்ள தனித்துவமான சட்டங்கள் குறித்து பேசினாா். என்எஸ்எஸ் திட்ட அலுவலா் சின்னதுரை வரவேற்றாா். ஆசிரியா் சிங்காரவேலு நன்றி கூறினாா்.