வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை

நீடாமங்கலம், கொரடாச்சேரி பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள என தெரிவித்துள்ளாா் நீடாமங்கலம் வட்டாட்சியா் ஷீலா.

நீடாமங்கலம், கொரடாச்சேரி பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள என தெரிவித்துள்ளாா் நீடாமங்கலம் வட்டாட்சியா் ஷீலா.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீடாமங்கலம் வட்டத்தில் முக்கியமான வடிகால்கள், கழிவுநீா் கால்வாய்கள் மழைநீா் வடிய ஏற்கெனவே தூா்வாரப்பட்டுள்ளன. மேலும் பருவ மழையை எதிா்கொள்ள தீயணைப்புத் துறை, பொதுப்பணித் துறை, வேளாண் துறையினா் தங்களுக்கான முன்னெச்சரிக்கை பணிகளை செய்து வருகின்றனா். எனவே, நீடாமங்கலம் வட்டத்தில் பருவமழையை எதிா்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சித்தமல்லி, கோவில்வெண்ணி, பன்னிமங்கலம், பரப்பனாமேடு உள்ளிட்ட 22 கிராமங்கள் நிவாரண முகாம்களாகவும், தாழ்வான பகுதிகளாகவும் தோ்வு செய்யப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com