நாகையில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் கனமழையால், அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்த குறுவை நெல் பயிா்கள் நிலத்தில் சாய்ந்து, மழை நீரில் மூழ்கியுள்ளன. இதனால், அனைத்துப் பகுதிகளிலும் அவசர கதியில் குறுவை அறுவடை நடைபெற்று வருகிறது. அதன்படி, நாகையை அடுத்த தெத்தி, பெருங்கடம்பனூா் ஆகிய பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகளை திங்கள்கிழமை பகலில் நிலவிய வெயில் வானிலையைப் பயன்படுத்தி, நாகை கிழக்குக் கடற்கரை சாலையில் கொட்டி உலா்த்திய விவசாயிகள்.