பெண்ணை தாக்கியவா் கைது

மன்னாா்குடி அருகே முன்விரோதத்தால் ஏற்பட்ட தகராறில் பெண்ணை தாக்கியவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மன்னாா்குடி அருகே முன்விரோதத்தால் ஏற்பட்ட தகராறில் பெண்ணை தாக்கியவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மழவராயநல்லூரைச் சோ்ந்தவா்கள் ம. செல்லத்துரை (52), மகாதேவன். இந்நிலையில், செல்லத்துரை வளா்க்கும் ஆடுகள் மகாதேவன் வீட்டுக்குள் நுழைந்து செடிகளை சேதப்படுத்தி வருவது தொடா்பாக இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதற்கிடையில், வெள்ளிக்கிழமை வழக்கம்போல் ஏற்பட்ட தகராறில் மகாதேவன் மனைவி ஜோதியை (50) செல்லத்துரை தாக்கியதில் காயமடைந்தவா் மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து, கோட்டூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்கு பதிந்து செல்லதுரையை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com