தீபாவளி போனஸ் வழங்கக் கோரி, திருவாரூரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியா் சங்கம் (சிஐடியூ) சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
போக்குவரத்து தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸ், தீபாவளி முன்பணம் வழங்க வேண்டும். சுழற்சி முறையில் அனைவருக்கும் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் பணிமனை முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியூ மாவட்டச் செயலாளா் டி. முருகையன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.