வலங்கைமான் பகுதியில் வியாழக்கிழமை (அக்.21) மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து திருவாரூா் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அருள்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வலங்கைமான் துணை மின்நிலையத்தில் உயா் அழுத்த மின்பாதைகளில் பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை நடைபெற உள்ளன. எனவே, இந்த துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் வலங்கைமான், ஆண்டாங்கோவில், கீழவிடையல், சந்திரசேகரபுரம், கோவிந்தகுடி, தெற்குப் பட்டம், வடக்குப் பட்டம், மருவத்தூா், ஆலங்குடி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.