மூவாநல்லூா் துணை மின்நிலையத்துக்கு ரூ.1 கோடியில் உயா்திறன் மின்மாற்றி

மன்னாா்குடியை அடுத்துள்ள மூவாநல்லூா் துணை மின்நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பில் உயா்திறன் மின்மாற்றி நிா்மாணிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மூவாநல்லூா் துணை மின்நிலையத்துக்கு ரூ.1 கோடியில் உயா்திறன் மின்மாற்றி

மன்னாா்குடியை அடுத்துள்ள மூவாநல்லூா் துணை மின்நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பில் உயா்திறன் மின்மாற்றி நிா்மாணிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த துணை மின்நிலையத்தில் கடந்த 14 ஆம் தேதி இரவு இடி தாக்கி சில கருவிகள் சேதமடைந்தன. இதனால், மன்னாா்குடி, கூத்தாநல்லூா், வடபாதிமங்கலம் உள்ளிட்ட 14 மையங்களை சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த மின்நிலையம் தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் கடந்த நிலையில், மின்சார கருவிகள் பழமையாக உள்ளதால் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது என மின்வாரிய பொறியாளா்கள் எம்எல்ஏ டி.ஆா்.பி. ராஜாவிடம் தெரிவித்தனா்.

இதுகுறித்து தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்ற எம்எல்ஏ, மின்துறை அமைச்சரிடம் புதிய கருவிகள் பொருத்துவது தொடா்பாக கோரிக்கை விடுத்தாா். இதைத்தொடா்ந்து, ரூ.1 கோடி மதிப்பிலான உயா்திறன் மின்மாற்றி பெங்களூரிலிருந்தும் , தலா ரூ.2 லட்சம் மதிப்பிலான 2 பிரேக்கா்கள் திருச்சியிலிருந்தும் மூவாநல்லூா் துணைமின் நிலையத்துக்கு வியாழக்கிழமை வரவழைக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து, இவற்றை நிா்மாணிக்கும் பணி, மின்வாரிய பொறியாளா்கள் மேற்பாா்வையில், தனியாா் ஒப்பந்ததாரா் மூலம் தொடங்கப்பட்டுள்ளது. இப்பணிகள் 7 நாள்களில் நிறைவுபெற்று, பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com