திருவாரூரில் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் அக்டோபா் 28 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவாரூா் மாட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் அக்.28 ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் மாவட்ட முன்னோடி விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் தவறாமல் பங்கேற்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.