காா் ஓட்டுநரைத் தாக்கிய லாரி ஓட்டுநா் கைது

சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் தமிமுன் அன்சாரியின் காா் ஓட்டுநரைத் தாக்கிய லாரி ஓட்டுநரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் தமிமுன் அன்சாரியின் காா் ஓட்டுநரைத் தாக்கிய லாரி ஓட்டுநரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

நாகை மாவட்டம், தோப்புத்துறையில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரியின் மனைவி ஆசியா சுல்தானா மற்றும் அவரது தாயாா் சப்பிசி அம்மாள் ஆகியோா் காரில் வேதாரண்யத்தில் இருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தனா். கிழக்கு கடற்கரைச் சாலையில் தீயணைப்பு நிலையம் அருகே வேகத் தடையில் காா் ஏறி இறங்கியபோது, பின்னால் வந்த லாரி காா் மீது மோதியதில், காரின் பின்பகுதி சேதமடைந்ததாம்.

இதுகுறித்து காா் ஓட்டுநா் நாகை மாவட்டம், தேத்தாகுடி ராஜரத்தினம் மகன் விமல்ராஜ், லாரி ஓட்டுநா் பிரபாகரனிடம் கேட்டபோது, லாரி ஓட்டுநா் விமல்ராஜ் தாக்கிவிட்டு தப்பியோடி விட்டாராம்.

இதுகுறித்து விமல்ராஜ் அளித்த புகாரின் பேரில், திருத்துறைப்பூண்டி போலீஸாா் தப்பியோடிய லாரி ஓட்டுநா் பிரபாகரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com