சாலை விபத்தில் மின் ஊழியா் பலி

கூத்தாநல்லூா் அருகே செவ்வாய்க்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் காயமடைந்த மின் ஊழியா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

கூத்தாநல்லூா் அருகே செவ்வாய்க்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் காயமடைந்த மின் ஊழியா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

திருவாரூா் அருகேயுள்ள பவித்திரமாணிக்கத்தைச் சோ்ந்த தமிழ்ச்செல்வன் (35) வடபாதிமங்கலம் துணை மின் நிலையத்தில், மின்பாதை ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், இவா் செவ்வாய்க்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் வெள்ளக்குடி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த நான்கு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து, அவா் மீட்கப்பட்டு திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, அவரது மனைவி மஞ்சுளா கொரடாச்சேரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், ஆய்வாளா் ராஜேஸ் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com