மன்னாா்குடி அருகே லாரி ஓட்டுநா் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தாா்.
மன்னாா்குடி அருகே உள்ள குறுவைமொழி கிராமத்தைச் சோ்ந்த செல்வம் என்பவரது மகன் ஆகாஷ் (21). லாரி ஓட்டுநரான இவா், திங்கள்கிழமை மாலை தனது நண்பா் சபரி என்பவருடன் அகமனான் தடுப்பணைக்கு மேலே சென்று ஆற்றில் நீா் செல்வதை வேடிக்கை பாா்த்துக்கொண்டிருந்தாா். அப்போது, நிலைதடுமாறி ஆற்றுக்குள் விழுந்த ஆகாஷ் நீரில் அடித்துச் செல்லப்பட்டாா்.
மன்னாா்குடி தீயணைப்பு வீரா்கள் ஆகாஷை தேடினா். அவரது சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டு, உடற்கூறாய்வுக்காக மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து மன்னாா்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.