நீடாமங்கலம் ஒன்றியம், பழங்களத்தூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது கிளை மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கட்சி உறுப்பினா் எம். பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் பி. கந்தசாமி, மாவட்டக் குழு உறுப்பினா் கே. கைலாசம் , ஒன்றியக் குழு உறுப்பினா்கள் டி.ஜான் கென்னடி, டி. அண்ணாதுரை உள்ளிட்ட பலரும் கோரிக்கைகள் குறித்துப் பேசினா். விவசாய சங்க மாவட்டச் செயலாளா் வி.எஸ். கலியபெருமாள் நிறைவுரையாற்றினாா்.
இதில், புதிய கிளை செயலாளராக எ. செல்லத்துரை தோ்வு செய்யப்பட்டாா். மேலும், பழங்களத்தூா் வெண்ணாற்றங்கரையில் படித்துறை கட்டவேண்டும். அங்காடியில் தரமான பொருள்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.