புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

திருத்துறைப்பூண்டியில் தனியாா் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

திருத்துறைப்பூண்டியில் தனியாா் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

திருத்துறைப்பூண்டி பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடா்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சி. விஜயகுமாா் உத்தரவின்பேரில், காவல் துணைக் கண்காணிப்பாளா் சோமசுந்தரம், ஆய்வாளா் கழனியப்பன், உதவி ஆய்வாளா் சுந்தரமூா்த்தி மற்றும் போலீஸாா் மருத்துவமனை தெருவில் அப்துல்காதா் (62) என்பவரது குடோனில் சோதனை மேற்கொண்டனா்.

இந்த சோதனையில், அங்கு தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்கள் பதுக்கி வைத்து, விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அப்துல்காதரை கைது செய்த போலீஸாா், ரூ.30,000 மதிப்பிலான 31 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com