திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதிகளில் 116 வாக்குச் சாவடி மையங்களில், கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை (செப்.12) நடைபெற உள்ளதாக வட்டாட்சியா் பி.டி. அலெக்சாண்டா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்துள்ளதாவது:
திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் கிராமப் பகுதிகளில் 50 வாக்குச் சாவடி மையங்கள், நகரப் பகுதியில் 10 வாக்குச் சாவடி மையங்கள் மற்றும் முத்துப்பேட்டை வட்டாரத்தில் உள்ள கிராமப் பகுதிகளில் 51 வாக்குசாவடி மையங்கள், பேரூராட்சியில் 5 வாக்குச் சாவடி மையங்கள் என 116 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை காலை 7 முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.
இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இம்முகாம்களில் பங்கேற்று, தடுப்பூசி செலுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள் எனத் தெரிவித்துள்ளாா்.